நடிகர் பிரபாஸுக்கு லைஃப் டைம் படமாக பாகுபலி அமைந்தது. அதன் இரண்டாவது பாகம் முடிவடைந்த நிலையில், புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
பாகுபலி படத்துக்காக வேறு படங்கள் எதிலும் நடிக்காமல் பிரபாஸ் தவிர்த்து வந்தார். பாகுபலியின் இரண்டாம் பாகம் முடிவடைந்த நிலையில், சுஜீத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு ஷங்கர் எசன் லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.