Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக இணையும் கார்த்திக் மற்றும் மகன் கவுதம் கார்த்திக்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (15:14 IST)
கவுதம் கார்த்திக் தனது அப்பா கார்த்திக்குடன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். `நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு கவுதம் கார்த்திக்கை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் அப்பா கார்த்திக்கும், மகன் கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

 
இப்படத்தினை கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார். நவம்பரில்  தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் முடிகிறது. படத்தின் தலைப்பு வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக  இருக்கிறது.
 
இந்நிலையில் தந்தை, மகன் இணைந்து நடிக்கும் இந்தக் கதையில் இருவருடைய கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம்  இருந்ததால், கார்த்திக்குடன் நடிக்க ஒப்புக்கொண்டார் கவுதம் கார்த்திக் என கூறப்படுகிறது.
 
பொருத்தமான கதை இருந்தால் தன் தந்தை கார்த்திக்குடன் இணைந்து நடிக்கத் தயார் என்று, சில மாதங்களுக்கு முன் கவுதம்  கார்த்திக் கூறியுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு 49 படத்தின் ஷூட்டிங்குக்காக வட இந்தியாவில் முகாமிடும் படக்குழு!

மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் என்ன பிரச்சனை?.. ஒரு மாதமாக நடந்த சிகிச்சை!

நடிகர் மம்மூட்டிக்கு பெருங்குடல் புற்றுநோயா..? பிரபல நடிகரின் பதிவு!

எம்புரான் படத்துக்கு சென்னையில் அதிகக் காட்சிகள்.. மாஸ் காட்டும் மோகன்லால் & பிருத்விராஜ் கூட்டணி!

‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு’ உனக்குப் பாடல் எழுதினேன் –மனோஜுக்கு வைரமுத்து அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments