Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய எஸ்.ஆர்.பிரபு

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (11:26 IST)
தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, சினிமா தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 
கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெறும் படப்பிடிப்புகளும், 23ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, சினிமாவில் வேலைசெய்து தங்கள் வயிற்றைக் கழுவும்  தொழிலாளர்கள்தான்.
 
இவர்களுக்கு உதவும் வகையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, 10 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தொழிலாளர்கள் கூட்டமைப்பான ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் அவர் இதை வழங்கினார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் இணையதளம் ஒன்று நடிகர் சங்கத்துக்கு அளித்த 10 லட்ச ரூபாயையும் விஷால் ஃபெப்சிக்கு வழங்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments