Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்நீச்சல் சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்!

எதிர்நீச்சல் சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்!
, திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (09:13 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 400 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலின் இத்தகைய வெற்றிக்கு அதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாரிமுத்துவின் நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.  ஆணாதிக்கமும் கட்டுப்பாடும் மிக்க ஒரு குடும்ப தலைவராக அவரின் நடிப்பு வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அந்த சீரியலில் அதிரடியாக வாசுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்த வைஷ்ணவியின் கதாபாத்திரம் நீக்கப்பட்டுள்ளது.  அந்த கதாபாத்திரத்துக்கு சமீபகாலமாகவே எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது நீக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தில் பரவும் அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண அழைப்பிதழ்