Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன்.. எப்போது தெரியுமா?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (13:39 IST)
சூர்யா நடிப்பில் மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். பழங்குடி இன மக்கள் குறித்த நிஜக்கதையை தழுவிய இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. ஆனால் இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மார்ச் 10 ஆம் தேதி சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் ரிலிஸானத். இந்த படம் ஆரம்பம் முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.

ஆனால் அதே நேரம் வசூலில் சோடை போகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதத்தை நெருங்க உள்ள நிலையில் இப்போது ஓடிடி தளத்தில் பிரீமியர் ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments