Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர், ரஜினி இணையும் பிரமாண்ட படம் - கதை விவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (09:18 IST)
ஷங்கர் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. படத்தின் பட்ஜெட் குறித்த செய்திகள் மிரள வைக்கின்றன. கதை விவாதம் முழுவீச்சில் நடந்து, ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கியுள்ளன.
எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரும் தொடர்ச்சியாக படங்களுக்கு வசனம் எழுதி வருகின்றனர். அதிலும் ஜெயமோகன் கமலின் பாபநாசம், பாலாவின் தாரை தப்பட்டை என இரு முக்கிய படங்களுக்கு எழுதியுள்ளார். வேறு படங்களும் கைவசம் உள்ளன. இதுதவிர அரைடஜன் மலையாளப் படங்கள்.
 
சமீபத்தில் தனது இணையத்தில், ஷங்கர் படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்டதை ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு மணிரத்னமும், ஷங்கரும்தான் அதிக அலைச்சலுக்குள்ளாகி வருகின்றனர். சுஜாதா போன்ற ஒரு சகலகலாவல்லவரை அவர்களால் கண்டடைய முடியவில்லை. அதனால், ஜெயமோகன், சுபா என்று படத்துக்குப் படம் தாவ வேண்டியிருக்கிறது.
 
அதிகாரப்பூர்வமாக வசனம் எழுதும் படங்களைவிட அதிக படங்களில் பெயர் இல்லாமல் வேலை பார்ப்பதாகவும், அதற்கு யாரும் யூகிக்க முடியாத லட்சங்களை சம்பளமாக பெறுவதாகவும் ஜெயமோகன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஷங்கர் படம் இதில் எது என்பது தெரியவில்லை.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments