Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் விஜய் சேதுபதி பட இயக்குனர்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (19:11 IST)
இயக்குனர் கோகுல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். கடைசியாக அவர் இயக்கிய ஜூங்கா திரைப்படம் சரியாக ஓடாததால் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் இப்போது கொரோனா குமார் எனும் படத்தை சந்தானத்தை வைத்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ஹெலன் என்ற படத்தின் ரீமேக்கையும் இயக்க உள்ளாராம். இந்த படத்தை நடிகர் அருண் பாண்டியன் தயாரிக்க உள்ளார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

என்னது வெப் சீரிஸாக வருகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்?

கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க உத்தரவிட முடியாது.. கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments