Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியோடு திரும்பி வருவேன்… சம்மன் குறித்து இயக்குனர் அமீர் விளக்கம்!

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:11 IST)
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், திமுக வில் அயலகப் பிரிவில் பொறுப்பில் இருந்தவருமான ஜாஃபர் சாதிக் மீது கடந்த பிப்ரவரி மாதம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அதன் பின்னர் அவர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரோடு தொடர்பு படுத்தி இயக்குனர் அமீர் மீது  விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பான விளக்கம் அளிக்கும் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் அமீர், தனக்கும் ஜாஃபருக்குமான உறவு இயக்குனர், தயாரிப்பாளர் உறவுதான் என்றும், அதைத் தவிர அவரோடு தனக்கு எந்த உறவும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.

மேலும் இந்த வழக்கு குறித்து எப்போது எந்த தகவல் வேண்டுமானாலும் தான் தெரிவிக்க தயாராக இருப்பதாக அமீர் கூறியிருந்தார். இந்நிலையில் நாளை அவர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நாளை டெல்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் “போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன், என் தரப்பில் இருக்கும் உண்மையையும் நியாயத்தையும் கூறி வெற்றியோடு திரும்பி வருவேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments