Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு விழாவைப் புறக்கணித்த தீபிகா படுகோனே

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (17:35 IST)
‘பத்மாவதி’ படத்தால் தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், மத்திய அரசு விழாவைப் புறக்கணிக்கிறார்.
 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. இந்தப் படத்தில் ராணி பத்மினியைத் தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, வட இந்தியாவின் சில மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 
இதனால், டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்த படம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில மாநில அரசுகள், இந்தப் படத்தையே தடை செய்துள்ளன. தீபிகாவின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் தீபிகா.
 
வரும் 28ஆம் தேதி, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி துவங்கி வைக்கும் இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருந்தார் தீபிகா. தற்போது, தன்னால் கலந்துகொள்ள முடியாத சூழல் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments