Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம்

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (14:54 IST)
நடிகை ஶ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாய் நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் சினிமா திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஶ்ரீதேவியின் உடல் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு மும்பை கொண்டுவரப்பட்டு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
சினிமா திரையுலகில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். குழந்தை  நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, பின் ஹீரோயினாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து, பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக விளங்கினார்.
 
இந்நிலையில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். அவர் வரைந்த ஓவியம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி  திரட்டுவதற்காக கொடுத்துள்ளார். அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. 10 லட்ச ரூபாய்க்கும் மேல் அது விலைபோகலாம் என கூறப்படுகிறது. அந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments