Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சென்னை தான் எனக்கு வீடு” – துல்கர் சல்மான்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (11:20 IST)
‘சென்னை தான் எனக்கு வீடு’ என மலையாள நடிகரான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

 
 
மலையாளத்தில் முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். 2012இல் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகமான துல்கர், 2014ஆம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘ஓகே கண்மணி’, ‘சோலோ’ என இரண்டு படங்கள் தமிழில் ரிலீஸாகிவிட்டன.
 
துல்கர் பிறந்தது கொச்சியில் என்றாலும், பள்ளிப்படிப்பை சென்னையில்தான் முடித்தார். எனவே, அவருக்கு சென்னை ரொம்பவே  ஸ்பெஷல். நிறைய நேரங்களை சென்னையில் செலவிடவே அவர் விரும்புகிறார்.
 
“சென்னை எனக்கு வீடு மாதிரி. எனக்கு சென்னையில் இன்னும் சொந்த வீடு இருக்கிறது. என் உறவினர்கள் சென்னையில் வசிக்கின்றனர். மலையாளப் படங்களின் ஷூட்டிங்கிற்காக நிறைய நேரம் கேரளாவிலேயே செலவிட வேண்டியிருப்பதால்,  சென்னையை ரொம்பவே மிஸ் பண்றேன். ஷூட்டிங் இல்லையென்றால் போதும். மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு  சென்னைக்கு வந்துவிடுவேன்” என்கிறார் துல்கர் சல்மான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments