Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி கலவரத்தைக் கண்டித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குப்பதிவு

Webdunia
வியாழன், 24 மே 2018 (07:54 IST)
தூத்துக்குடி கலவரத்தைக் கண்டித்து, நடிகை நிலானி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீஸார் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி பலர் தங்களது கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து சின்னத்தைரை நடிகை நிலானி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட படுகொலை என்றும் காவலர் வேடத்தில் நடிப்பது கூட அறுவறுப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையில் நடத்தப்பட்ட படுகொலை போல், இந்த கூஜா அரசு நம்மையும் கொல்ல நினைக்கின்றனர் என கடுமையாக தமிழக அரசை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் நிலானி.
 
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிது. இதனால் சென்னை தி.நகர் காவல் நிலையத்தில் நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு படத்தில் வில்லனே இவர்தானா?... செம்ம ஸ்கெட்ச் போட்ட ராஜமௌலி!

மங்காத்தா படத்தில் ஏமாற்றியதற்காக விடாமுயற்சி படத்தில் அஜித்தை பழிவாங்கி விட்டாரா த்ரிஷா?

விளம்பரமே இல்லாமல் சைலண்ட்டாக ஓடிடியில் வெளியானது ஷங்கரின் கேம்சேஞ்சர்!

விடாமுயற்சி முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?... வெளியான தகவல்!

நான் விஜய் சேதுபதியை வைத்துப் படம் இயக்குகிறேனா?... மணிகண்டன் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments