Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் கொலையல்ல….எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் !

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (17:15 IST)
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதை பொருள் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு போதை பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுஷாந்த் சிங் காதலி ரியா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து நடிகை சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீபிகா படுகோனிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் குறித்து செல்போனில் பேசிக் கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சாரா அலி கான், தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நடிகைகளிடம் இருந்தும் அவர்களது செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் விசாரணையில் நடிகை சாரா அலி கான் தான் சுஷாந்த் சிங்குடன் டேட்டிங் சென்றதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாரா அலி கானும், சுஷாந்த் சிங்கும் “கேதர்நாத்” படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போதிருந்தே இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் தாய்லாந்திற்கு டேட்டிங் சென்றதாகவும், சுஷாந்திற்கு போதை பழக்கம் இருந்ததாகவும், தனக்கு போதை பழக்கம் கிடையாது என்றும் சாரா அலி கான் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா இல்லை தற்கொலை செய்துகொண்டாரா என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடற்கூறியல் ஆய்வு நடைபெற்றது.  இதில் எய்ம்ஸ்நச்ச்யியல் ஆய்வுக் குழு தெரிவித்த தகவலின்படி சுஷாந்த் கழுத்து நெறித்துக்கொல்லப்பவில்லை என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதற்றம் இல்லாமல் தூங்கினேன்… இயக்குனரின் கலைஞராக இருக்க விரும்புகிறேன் – நிமிஷா சஜயன்!

ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

உலக நாயகனுக்குக் கௌரவம்... ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு அழைப்பு!

வருகிறது பிச்சைக்காரன் மூன்றாம் பாகம்… அப்டேட் கொடுத்த விஜய் ஆண்டனி!

அடுத்த கட்டுரையில்
Show comments