Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் வந்தா சரி, ரஜினி வந்தா தப்பா? – பாபி சிம்ஹா கேள்வி

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (19:30 IST)
எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தா சரி, ரஜினி வந்தா தப்பா? என நடிகர் பாபி சிம்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். 


 

 
ஹீரோ, வில்லன் என எந்த பாரபட்சமும் பார்க்காமல், வருகிற வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு வஞ்சனையில்லாமல் நடிப்பவர் பாபி சிம்ஹா. இவர் வில்லனாக நடித்த ‘கருப்பன்’ படம் சமீபத்தில் ரிலீஸானது. பாபி ஹீரோவாக நடித்த ‘திருட்டுப்பயலே 2’, விரைவில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி அவரிடம் கேட்டால், ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு? ரஜினி மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எம்.ஜி.ஆர் போன்றவர்கள் சினிமாவில் இருந்துதானே அரசியலுக்கு வந்தார்கள்? மக்களிடம் அறிமுகமாகவதற்கு, சினிமா விசிட்டிங் கார்டாக உள்ளது. அந்த விசிட்டிங் கார்டு ரஜினியிடம் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் வரவேற்பேன் என தெரிவித்துள்ளார் பாபி சிம்ஹா. 

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments