Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு நோ, தீபிகாவுக்கு எஸ்: அக்சயகுமார் அதிரடி

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (00:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்சயகுமார் நடித்த இன்னொரு படம் 'பேட்மேன்'. இந்த நிலையில் '2.0' திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் தனது பேட்மேன் படமும் வெளியாகும் என்று அக்சயகுமார் அறிவித்தார். ரஜினி படக்குழுவினர்கள் கேட்டுக்கொண்டும் அவர் தேதியை மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் 2.0 ஏப்ரலுக்கு தள்ளிப்போனது.

இந்த நிலையில் தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவத்' திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பன்சாலி, அக்சயகுமாரிடம் நேரில் சென்று தனது படத்திற்காக 'பேட்மேன்' படத்தின் ரிலீசை தள்ளிப்போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

பன்சாலி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள அக்சயகுமார், தனது பேட்மேன் படத்தை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு மாற்றி கொள்வதாக அறிவித்துள்ளார். அக்சயகுமாரின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார் சஞ்சய்லீலா பன்சாலி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமாவும் V J சித்து!

’எம்புரான்’ படத்தில் முல்லை பெரியாறு காட்சிகள்: தமிழக விவசாயிகள் கண்டனம்..!

மோகன்லாலின் எம்புரான் படத்தின் காட்சிகள் நீக்கம்… ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கண்டனம்!

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments