Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளிப்பால் கொடுத்து என் மகளை கொன்னு இருக்கனுமா? நிக்சனிடம் கேள்வி கேட்ட நபர்..!

கள்ளிப்பால் கொடுத்து என் மகளை கொன்னு இருக்கனுமா? நிக்சனிடம் கேள்வி கேட்ட நபர்..!
, செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:32 IST)
என் மகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசி இருக்க கூடாது என அர்ச்சனாவின் அப்பா நிக்சனிடம் வருத்தத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் உறவினர்கள் வருகை வாரம் என்பதால் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அர்ச்சனாவின் அம்மா அப்பா இருவருமே இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நிலையில் போட்டியாளர்களிடம் சகஜமாக பழகுகின்றனர் 
 
அப்போது நிக்சனிடம் என் மகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்னு இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசி இருக்க கூடாது என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நான் அப்படி பேசி இருக்க மாட்டேன், அர்ச்சனாவிடம் பேசினேனா? என்று கேட்க இல்லை நீங்கள் வேறு ஒருவரிடம் பேசினீர்கள் என்று கூறினார். அதன்பின்னர் நிக்சன் வருத்தம் தெரிவித்து கொண்டார்.
 
இதனை அடுத்து அர்ச்சனாவின் அம்மா ’நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்கள், மற்றபடி நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள், கோபம் வரும்போது வாயில் தண்ணீரை வைத்துக்கொண்டு வெளியே சென்று விடுங்கள் என்று நிக்சனுக்கு  அறிவுரை கூறினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் குடும்ப உறுப்பினர்கள்.. பூர்ணிமாவுக்கு ஷாக் கொடுத்த அம்மா..!