Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கிய விவகாரம் – அமலாபால் மேல் நடவடிக்கை ?

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (14:29 IST)
போலியான முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலா பால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டும் பென்ஸ் எஸ் ரக கார் ஒன்றை 1.12 கோடி ரூபாய்க்கு வாங்கிய நடிகை அமலாபால் அதனை வரி ஏய்ப்புக்காக போலியான முகவரியில் பதிவு செய்தார். அதாவது தன்னுடைய கேரள முகவரியில் பதிவு செய்தால் 20 லட்சத்துக்கும் மேல் வரிகட்ட வேண்டும் என்பதால் புதுச்சேரியில் போலியான ஒரு முகவரி கொடுத்து 1.7 லட்சம் மட்டுமே வரிக் கட்டினார்.

ஆனால் அமலாபால் கொடுத்த முகவரியில் வேறொரு நபர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அமலாபால் மேல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இரண்டு வருடங்களாக நடந்துவரும் நிலையில் கேரள மாநில போக்குவரத்து ஆணையர், புதுச்சேரி சட்டத் துறைக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு விரைவாக முடிந்து அமலாபால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments