Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் மகாபாரத பேச்சுக்கு அக்‌ஷரா ஹாசன் கூறிய நாசுக்கான கருத்து

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (22:27 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மகாபாரதம் குறித்து அவர் கூறிய கருத்தால் ஒருசிலர் நீதிமன்ற படியை ஏறியுள்ளனர். கமலுக்கு நெருக்கமான ஒருசிலரே அவர் மகாபாரதம் குறித்து கூறிய கருத்துக்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.



 


இந்நிலையில் கமலின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்சராஹாசன் கமலின் மகாபாரத கருத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அப்பா எதையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுபவர். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் நிறைய இருக்கு. அவர் மேல் எழும் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்பதும், அதற்கு அவர் பதில் சொல்வது தான் சரியாக இருக்கும்' என்று நாசுக்கான பதிலை கூறி தப்பித்து கொண்டார்

கமலின் இந்த கருத்து குறித்து அவரது இன்னொரு மகளான ஸ்ருதிஹாசன் கருத்து கூற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அஜித்தோடு அடுத்த படத்துக்கு துண்டு போட்டு வைத்த பிரபல இயக்குனர்!

நான் கட்சி ஆரம்பிப்பது உறுதி.. விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பேன்: கூல் சுரேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments