Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அர்ஜுன் &ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (15:41 IST)
அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் த்ரில்லர் படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே . இந்த நிலையில் அர்ஜுன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

இயக்குனர் தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

அதையடுத்து அந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதால் அவர் பின்னர் படக்குழுவுடன் இணைய உள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த படக்குழு இப்போது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாம். அர்ஜுன் வந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments