Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் ‘புலி’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2015 (20:28 IST)
நடிகர் விஜய் நடித்துள்ள புலி படத்தின் க்ளைமேக்ஸ் வெளியாகியிருக்கிறது

 
குழந்தைகளுக்கான படமாகவும் அதேநேரம் நிகழ்கால அரசியலைச் சீண்டும் வலிமையான படமாகவும் ரிலீஸாகிறது ‘புலி’. 118 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் ‘புலி’ படத்தில் ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்திருக்கிறார். இதில் அரசியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவிக்கும் விஜய்க்கும்தான் மோதல்.

இதைவைத்து ஜெ – விஜய் மோதல்தான் படத்திலும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது என அனுமானங்கள் அலையடிக்கத் தொடங்கிவிட்டன. அதை உண்மையாக்குவதுபோல், ‘நீங்க நல்லவங்கதான். ஆனா, உங்களைச் சுத்தி இருக்கிறவங்க சரியில்லையே… நீங்க திருந்தினால் போதும்’ என உள்குத்து வசனங்களும் ‘புலி’ படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
 
இறுதியில் விஜய்யின் நேர்மையான செயல்பாடுகளைக் கண்டு மனம் திருந்தும் ஸ்ரீதேவி, தனது கிரீடத்தைக் கழட்டிக் கொடுத்து, ‘நீதான் இந்த நாட்டை ஆளணும்’ எனச் சொல்ல, அதனை விஜய் பெற்றுக் கொள்கிறார். கிரீடத்தைத் தலையில் வைத்து விஜய் ராஜாவாக மாறும் போது மக்கள் ஆரவாரித்துக் கொண்டாடுகிறார்கள். அதோடு படம் நிறைவு பெறுகிறது. ‘புலி’
 
படத்தின் இந்த க்ளைமாக்ஸ் காட்சி விஜய் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அனிருத் மேஜிக் ஆன் தி வே... விரைவில் விடாமுயற்சி முதல் சிங்கிள்!

தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியேற மணிரத்னத்தின் கஞ்சத் தனம்தான் காரணமா?

இந்த வயசுலயே இவ்ளோ க்ளாமர் தேவையா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அனிகா!

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!

Show comments