Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மரக் கடத்தலில் என்னுடைய பெயரை இழுப்பதா - நடிகர் சரவணன் கோபம்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2015 (11:07 IST)
திருப்பதி அருகே பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 தமிழ் கூலித் தொழிலாளர்களை கடத்தி வந்து சுட்டுக் கொன்ற ஆந்திர அதிரடிப்படை போலீசார், கொல்லப்பட்டவர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக பொய்யுரைத்து வருகின்றனர். இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அதிரப்படை போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த படுகொலைகளைத் தொடர்ந்து செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட சில்ரை சித்தூர் போலீசார் சென்னையில் கைது செய்ததாக வதந்தி பரவியது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நடிகர் சரவணன் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இணையத்தில் இந்த செய்தி வேகமாக பரவியது.
 
ஆனால், இந்த செய்தி வெறும் புரளி என்பதும், சரவணன் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதும் தெரிய வந்தது. செம்மரக் கடத்தலில் என்னுடைய பெயரை தேவையில்லாமல் இழுத்திருப்பதாக ஆவேசப்பட்ட அவர், இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் தரவிருப்பதாக கூறினார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments