Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்தில் மலர் டீச்சர்?

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2016 (16:59 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகை சாய்பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


 

 
ஏற்கனவே, மணிரத்னம் நடிகர் கார்த்தி மற்றும் நானியை வைத்து இயக்குவதாக இருந்த படம் கைவிடப்பட்டது. 
 
அதன் பின் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகர்களை வைத்து அவர் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. கடந்த டிசம்பர் மாதமே அதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துல்கர் சல்மான் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கால்ஷீட் விஷயங்களில் சொதப்பியதால் அந்த படமும் கைவிடப்பட்டது.
 
அதன் பின் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக வெறொரு கதாநாயகியை மணிரத்னம் தேடிக் கொண்டிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியது.


 

 
இந்நிலையில், புதிய செய்தியாக, பிரேமம் எனும் மலையாளப்படத்தில் மலர் டீச்சராக நடித்து தமிழ் மற்றும் மலையாள இளசுகளின் மனதை கொள்ளையடித்த  நடிகை சாய் பல்லவி மணிரத்னம் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழில் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த அவர், இயக்குனர் மணிரத்னம் அழைத்ததும் ஓகே சொல்லிவிட்டாராம். வருகிற ஜீன் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும், விரைவில் அந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments