Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸுடன் மீண்டும் இணையும் ராஜமௌலி...

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (15:33 IST)
பாகுபலி பட கதாநாயகன் பிரபாஸ் மீண்டும் இயக்குனர் ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாகுபலி-2 உலக அளவில் ரூ.1700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமடைந்து விட்டார் பிரபாஸ். எனவே, அவரை நேரிடையான இந்தி படத்தில் நடிக்க வைக்க பலர் முயன்று வருகின்றனர். ஆனால், அதில் ஆர்வமில்லாமல் பிரபாஸ் ஒதுங்கியே இருந்தார். தற்போது அவர் சஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இதற்கிடையே, பாகுபலி2 படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்ட பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், பிரபாஸை வைத்து நேரிடையான பாலிவுட் படத்தை எடுக்க விரும்பினார். அதற்கு ஒருவழியாக தற்போது பிரபாஸ் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது. 
 
அதற்கு காரணம் அந்த படத்தை இயக்கப்போவது இயக்குனர் ராஜமௌலி என்பதே. ராஜமௌலியுடன் பல வருடங்கள் வேலை பார்த்துள்ளேன். அவருடை படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது” என பிரபாஸ் கூறியுள்ளாராம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments