Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவில் குரூப்பிசம் இருக்கு… நட்ராஜ் சர்ச்சை டிவீட்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (12:00 IST)
தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்ராஜ் பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழி படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் ’தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????...’ என ஒரு டிவீட்டைப் போட்டுள்ளார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் சுஷாந்த் தற்கொலையை முன்னிட்டு நெப்போட்டிசம் பற்றி விவாதங்கள் எழுந்தன. இதில் கரன் ஜோஹர், மகேஷ் பட் மற்றும் சல்மான் கானின் சகோதரர்கள் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இதுகுறித்து தற்போது ஆஸ்கர் வென்ற ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் கூட தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நட்டியின் இந்த டிவீட் யாரைக் குறிக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments