Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் தொலைக்காட்சி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு புகார்

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (10:20 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
தனியார் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் நெறியாளராக இருந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகையும் ஆவார்.
 
அந்த நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படவே சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் இருந்து லட்சுமி வெளியேறினார்.
 
இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜை சந்தித்த லட்சுமி ராமகிருஷ்ணன்  பிரபல தனியார் தொலைக்காட்சி மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
அந்தப் புகாரில் கூறப்பட்டதாவது , "நான் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் 25 வயதில் 8 முறை கருக்கலைப்பு செய்ததாக சொன்னார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டேன். அந்த வார்த்தை நான் நடத்திய நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டது. நான் 3 படங்களை இயக்கி இருக்கிறேன். 45 படங்களில் நடித்துள்ளேன்".
 
"ஒரு தனியார் தொலைக்காட்சி என்னை கிண்டல் பண்ணும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வெளியிட்டது. தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை வெளியிட இருக்கிறது. என்னை இழிவுபடுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments