Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2015-ல் சிங்கம் 3 - சுறுசுறுப்பு காட்டும் ஹரி

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2014 (13:19 IST)
சிங்கம் 3 வருமா என்ற கேள்விக்கு ஒய் நாட்? என்று பாஸிடிவான பதிலை சமீபத்தில் தந்தார் சூர்யா. இது சும்மா மேடைப் பேச்சல்ல. சூர்யாவின் மார்க்கெட்டை சி சென்டரில் ரிவிட் அடித்து பதிய வைத்த படம் சிங்கம். அதனை சிங்கம் 2 பலப்படுத்தியது.
கதை அமைந்தால் அடுத்த வருடமே சிங்கம் 3 ஆரம்பிக்கப்படலாம் என்று அப்போது சூர்யா தெரிவித்தார். ஹரிக்கு இது போதாதா?
 
அவரது கதை இலாகாவில் ஏற்கனவே சிங்கம் 3 -க்கான கதைகள் தயார். அதில் ஒரு நான்கை சூர்யாவிடம் அவர் கூறியதாகவும், சூர்யா ஒன்றை டிக் செய்திருப்பதாகவும், அதற்கு திரைக்கதை அமைக்கும் பணி நடப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
ஹரி தனது கதையிலாகாவில் கதை எழுதவும், சீன் எழுதவும் பயன்படுத்தும் உதவி இயக்குனர்களை படப்பிடிப்பு தளத்தில் அனுமதிப்பதில்லை. அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்களுக்கு கதை இலாகாவில் அனுமதியில்லை. ஹரியின் கமர்ஷியல் சக்சஸுக்கும், அவர் இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்தப் படங்களை உடனே ஆரம்பிப்பதற்கும் இதுதான் முக்கிய காரணம்.
 
 
 

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

Show comments