Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சுந்தர். சி, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்

Webdunia
திங்கள், 19 மே 2014 (14:00 IST)
பாண்டியநாடு படத்தின் வெற்றி விஷாலின் திரை வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியது. நான் சிகப்பு மனிதன் சுமாராகப் போனதுகூட விஷாலுக்கு பெரிய அடி இல்லை. ஹரியின் பூஜையில் அவர் நடிப்பதைதான் பரபரப்பாக சினிமா உலகம் பேசுகிறது.
பூஜைக்குப் பிறகு புதிதாக இரு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதில் ஒரு படத்தை இயக்குவது சுந்தர். சி.
 
இவரது இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா ஒரு வருடத்துக்கு மேலாகியும் வெளியாகவில்லை. தயாரிப்பாளரின் முந்தைய படங்களின் நஷ்டம் மத கஜ ராஜாவை அழுத்துவதால் படம் இன்னமும் திரைக்கு வராமல் உள்ளது. படத்தை இயக்கிய சுந்தர். சி, நடித்த விஷால் இருவருக்குமே படம் வெளியாகாமலிருப்பது பின்னடைவுதான். அதற்கு பரிகாரமாக மீண்டுமொரு படத்தில் இருவரும் இணைய உள்ளனர்.
 
அதேபோல் பாண்டிய நாடு படத்தை இயக்கிய சுசீந்திரனுக்கு மறுபடியும் விஷால் கால்ஷீட் தந்துள்ளார். பாண்டிய நாடு வெற்றி பெற்றதால் இவர்கள் இணையவிருக்கும் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments