Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழிவாங்கும் கதையுடன் வரும் ஷகிலா

Webdunia
புதன், 18 ஜூன் 2014 (15:32 IST)
நடிகை ஷகிலாவின் சுயசரிதையான ஆத்மகதா கேரளாவில் ஷகிலா மீதான அபிப்ராயத்தை மாற்றியமைத்திருக்கிறது. கவர்ச்சி நடிகை என்பதைத் தாண்டி அவரையும் ஒரு பெண்ணாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொத்த கேரளாவும் மாறவில்லை என்றாலும் சிலரின் கண்ணோட்டங்களையாவது இந்தப் புத்தகம் மாற்றியிருப்பது வரவேற்புக்குரியது.
 
ஷகிலாவின் ஆசைகளாக இருந்தது குடும்பம், சுயசரிதை மற்றும் இயக்கம். அதில் முதல் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் இன்னமும் அவரிடம் உள்ளது. அதற்கு அவர் மட்டும் மனம் வைத்தால் போதாது. ஷகிலாவின் கடந்தகாலத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் ஓர் ஆணும் தேவை.
 
இரண்டாவது விருப்பத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டார். மூன்றாவது இயக்கம். விரைவில் அதுவும் நிறைவேறப் போகிறது.
 
பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதையை விரைவில் தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்கப் போகிறார் ஷகிலா. படத்தை தயாரிப்பதற்கான பண உதவி கிடைத்திருப்பதால் இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டார். 
 
படத்தில் ஷகிலா நடிப்பாரா? வேறு யார் நடிக்கிறார்கள்? 
 
இந்தக் கேள்விகளுக்கு விரைவில் ஷகிலாவே பிரஸ்மீட் வைத்து பதிலளிக்கயிருக்கிறார்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?