தெருநாய்களின் நலவாழ்வில் தீவிர அக்கறை காட்டி வருகிறார் த்ரிஷா. அவர் தெருவில் இருந்து எடுத்து வளர்த்த காட்பரி என்ற நாய் இறந்த போது துக்கம் தாளாமல் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். தெருநாய்களின் மேலான வாழ்வுக்கு சென்னை மேயருக்கு த்ரிஷா கடிதம் அனுப்பியது நினைவிருக்கலாம்.
எண்ணம், செயலில் நாய்க்கார சீமாட்டியாக இருக்கும் அவரை கௌரவப்படுத்தும் விதமாக அவரது தோழிகள் இருவர் தங்களின் நாய்குட்டிகளுக்கு த்ரிஷ் என்று த்ரிஷாவின் பெயரையே வைத்துள்ளனர். இந்த இரு நாய்குட்டிகளை அந்தத் தோழிகளுக்கு தந்ததே த்ரிஷாதானாம்.
என்னுடைய தோழிகள் இருவர் தங்களின் நாய்குட்டிகளுக்கு த்ரிஷ் என்று என்னுடைய பெயரை வைத்துள்ளனர். எனக்கு பெருமையாக உள்ளது என சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் த்ரிஷா.