Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர்களான சினேகா - பிரசன்னா தம்பதி

Webdunia
வெள்ளி, 2 மே 2014 (15:12 IST)
பிரசன்னா - சினேகா இணைந்து கேம் சேஞ்சர் என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் நடுவில் காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 
 
இவர்களின் திருமணத்துக்குப் பிறகு சில விளம்பரங்களில் ஜோ‌டியாக தோன்றினர். ஆனால் இருவரும் இணைந்து நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதனை அவர்களே உருவாக்கியுள்ளனர்.
 
தங்களின் கேம் சேஞ்சர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். படத்தை இயக்கும் லக்ஷ்மிராமு பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். படத்துக்கு டோனாவூர்ராதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர தங்களை ஒன்று சேர்த்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளனர். இவர் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பெருச்சாளி படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
 

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments