Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்க்கி

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2014 (16:52 IST)
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியின் வளர்ச்சி அபாரமானது. பாடலாசிரியர், வசனகர்த்தா என்று நாலுகால் பாய்ச்சல் காட்டுகிறார்.
 
ஏற்கனவே சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி சூர்யா நடிக்கும் படத்துக்கு வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார்.
 
அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். யுவன் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். காஸ்ட்யூம் வாசுகி பாஸ்கர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பு.
 
இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை மதன் கார்க்கி ஏற்றுக் கொண்டுள்ளார். பொதுவாக வெங்கட்பிரபு படங்களின் கதை, திரைக்கதை, வசனத்தை அவரேதான் எழுதுவார். இந்தமுறை வசனம் எழுதும் பொறுப்பை மட்டும் மதன் கார்க்கிவசம் ஒப்படைத்துள்ளார்.
 
அஞ்சான் முடிந்ததும் இந்தப் புதிய படம் தொடங்க உள்ளது.

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

Show comments