Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு, செல்வராகவன் படம் நிறுத்தம் - உஷாரான தயாரிப்பாளர்

Webdunia
வியாழன், 15 மே 2014 (11:24 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கயிருந்த படம் தயாரிப்பாளரால் நிறுத்தப்பட்டுள்ளது.  

இரண்டாம் உலகத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. படத்தை வருண் மணியன் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தனர். இந்நிலையில் படத்தை தற்காலிகமாக வருண் மணியன் நிறுத்தி வைத்துள்ளார்.
இரண்டாம் உலகம் படுதோல்விடைந்ததால் படத்தை தயாரித்த பிவிபி சினிமா செல்வராகவனிடம் பலகோடிகள் நஷ்டஈடு கேட்டது. செல்வராகவனும் மூன்றரை கோடிகள் பிவிபி சினிமாவுக்கு தந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இந்த கொடுக்கல் வாங்கல் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லையாம். பிவிபி சினிமாவுக்கு செல்வராகவன் இன்னும் பல கோடிகள் தர வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படியொரு சூழலில செல்வராகவனின் இயக்கத்தில் படம் தயாரித்தால் படத்தை வெளியிடும் போது சிக்கல் ஏற்படாலம் என்பதால் வருண் மணியன் படத்தயாரிப்பை றிறுத்தியுள்ளார்.
 
முரளி மனோகரின் முந்தைய கடன்களுக்காக ஆனானப்பட்ட கோச்சடையானுக்கே கட்டையை போட்டார்கள். அப்படியிருக்க செல்வராகவனை மட்டும் விடுவார்களா? இதன் காரணமாகவே பிவிபி யுடனான நஷ்டஈடு கணக்கை செல்வராகவன் தீர்க்கும்வரை சிம்பு - செல்வராகவன் படத்தை ஆரம்பிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளாராம் வருண் மணியன்.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments