Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதை சொல்லி ஷாக் தந்தால் சம்பளமே வேண்டாம்

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2014 (19:47 IST)
ஒருகட்டத்தில் எல்லா நடிகைகளும் சொல்லும் அதே விஷயத்தை அதே வார்த்தைகளில் சமந்தாவும் கூறியுள்ளார். 
 
என்ன விஷயம்...?
விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடிப்பதால் சமந்தாவின் சம்பளமும் உயர்ந்துவிட்டது. அதனை சிலர் ஒரு கோடி ஒன்றரை கோடி என்று ஊதிப்பெருக்க, அதிர்ந்துவிட்டார் சமந்தா. சமந்தாவுக்கு இவ்வளவு சம்பளமா என்று தயாரிப்பாளர்கள் அவரை ஒதுக்கினால்...? அதனால் அவராகவே முன்வந்து தனது சம்பளம் குறித்து விளக்கம் தந்துள்ளார்.
 
என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரவி உள்ளன. எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல கேரக்டர்கள்தான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் சம்பளத்தை குறைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு ரொம்ப ஷாக் கொடுக்கும் கதையாக இருந்தால் அந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார். சிறு பட்ஜெட் படங்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. நல்ல கதை என்று எனக்கு தோன்றினால் அந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்தாற் போல் சம்பளம் வாங்கிக் கொள்வேன். 
 
சமந்தாவுக்கு ஷாக் தரும் கதை எதுவும் இருந்தால் பட்ஜெட்டில் பாதி மிச்சமாகும். சமந்தா தயார், இயக்குனர்கள் தயாரா?

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments