Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற நீதிபதி பெஃப்சி தேர்தல் அதிகாரியாக நியமனம்

Webdunia
வெள்ளி, 2 மே 2014 (16:57 IST)
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெஃப்சி) தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் 2014 - 2016 -ம் ஆண்டுக்கான தேர்தலை விரைவில் நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக பெஃப்சி அமைப்பு சார்பில் தேர்தலை நடத்த ஓய்பு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அத்துடன் தென்னிந்திய சினிமா மற்றும் டி.வி.ஓட்டுனர்கள் சங்கம், தங்களுடைய சங்க நடவடிக்கைகளில் பெஃப்சி தலையிடக் கூடாது என்று தனியாக மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த இரு தரப்பினரும் ஒத்துக் கொண்டதாகவும், தேர்தல் அதிகாரியாக முன்னாள் மாவட்ட நீதிபதி கே.பாலசுப்ரமணியன் செயல்படுவார் எனவும் தனது தீர்ப்பில் கூறினார்.
 
மேலும், நீதிபதி கே.பாலசுப்ரமணியன் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்றும், தேர்தல் முடிந்த பின் அது குறித்த அறிக்கையை ஜுன் 9 -ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
 

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments