Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இல்லாமல் அஜீத் படப்பிடிப்பு - போலீஸுக்குப்போன பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 30 மே 2014 (12:22 IST)
அனுமதி பெறாமல் இரவில் படப்பிடிப்பு நடத்தியதால் எரிச்சலடைந்த பொதுமக்கள் போலீஸில் புகார் தந்தனர். புகாரை ஏற்றுக் கொண்ட போலீஸார் தயாரிப்பு மேலாளர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இரவுவேளைகளில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஆக்ஷன் காட்சியொன்றை படமாக்கினர். தற்போது இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு சென்னை பாலவாக்கத்தில் நடந்து வருகிறது.
 
இங்குள்ள விஐபி லேஅவுட் காலனியில் கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதிக வாகனங்கள் காரணமாக சாலையில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். மேலும் பிரகாசமான விளக்குகள் பொருத்தி, படப்பிடிப்பை நடத்தியதால் வெளிச்சத்தாலும், படக்குழுவினர் ஏற்படுத்திய இரைச்சலாலும் அப்பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் அவதிப்பட்டனர். ஒருகட்டத்தில் பொதுமக்கள் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததோடு நீலாங்கரை போலீஸில் புகாரும் தந்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸார்ர் படக்குழுவிடம் விசாரணை நடத்தினர். அதில் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியது தொpய வந்தது.
 
உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி போலீஸார் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக தயாரிப்பு மேலாளர், அவரது உதவியாளர், லைட்பாய் என மூவரை கைது செய்தனர்.
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments