Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத்துக்கு பிறகு விக்ரமை இயக்கும் கௌதம்...?

Webdunia
சனி, 21 ஜூன் 2014 (10:54 IST)
அந்நியன், பீமா, ஐ என்று நடிக்கிற எல்லா படத்துக்கும் தலா நாலு வருடங்கள் தாரைவார்க்க தயங்காதவர் விக்ரம். இப்படியே போனால் ரசிகர்கள் நம்மை மறந்துவிடுவார்கள் என்பதை கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்டவர், ஐ வெளியாகும் முன்பே அடுத்தடுத்தப் படங்களை கமிட் செய்ய ஆரம்பித்துள்ளார்.
தற்போது ஃபாக்ஸ் ஸ்டார், முருகதாஸ் இணைந்து தயாரிக்கும் பத்து எண்ணுறதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறவர் விஜய் மில்டன். குறுகியகால தயாரிப்பாக தயாராகிவரும் இப்படம் முடிந்ததும் கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என பேசப்படுகிறது. 
 
சிம்பு, அஜீத் படங்களை ஒரே நேரத்தில் கௌதம் இயக்கி வருகிறார். அஜீத் படத்தின் சில முக்கிய காட்சிகள் சமீபத்தில் மலேசியாவில் படமாக்கப்பட்டது. செப்டம்பரில் மொத்த படத்தையும் முடித்து நவம்பரில் படத்தை வெளியிடுவதாக திட்டம். அப்போது விஜய் மில்டன் படம் முடிந்து விக்ரமும் ப்ரீயாகிவிடுவார்.
 
ஐ படத்துக்குப் பிறகு விக்ரமை தரணி இயக்குவார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. அதனை விஜய் மில்டன் தட்டிப் பறித்தார். அடுத்து கௌதம். என்ன செய்யப் போகிறார் தரணி?

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments