பூசணிக்காயைத் துருவி, 4 டம்ளர் நீர் சேர்த்து வேகவைத்து வெள்ளைத் துணியில் வடிகட்டி பிழிந்தெடுக்க வேண்டும்.
11/2 கிலோ சர்ககரை சேர்த்து அடுப்பில் ஏற்றி வேக வைக்க வேண்டும். சர்க்கரை பாகாக உருகி, மொத்தமாக இறுகி வரும் வேளையில் வாணலியில், நெய் வைத்து முந்திரி, திராட்சை, பாதாம் வறுத்து, அல்வாவில் போட்டு கிளறி கடைசியாக ஏலப்பொடி சேர்த்து, ஜாதிக்காய்ப் பொடி போட விரும்பினால் போட்டு கடைசியாக கேசரி பவுடர் சேர்க்கலாம். கலர் சேர்ககாவிட்டாலும் அது இயற்கையான தேன் நிறத்தோடு நன்றாக இருக்கும்.