Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும்:அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (17:10 IST)
மொபைல் ஃபோனை அதிக நேரம் பயன்படுத்தினால் தலையில் பின்புறமுள்ள மண்டை ஓட்டில் கொம்பு முளைக்கும் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மொபைல் ஃபோன் பயன்பாடு அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. தொடர்புகொள்ள, புகைப்படம் எடுக்க, திரைப்படம் பார்க்க, மட்டுமல்லாமல் தொழில் ரீதியாகவும் மொபைல் பயன்படுகிறது.

இதையும் தாண்டி மொபைல் கேம்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அடிமையாகி உள்ளனர். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் மொபைல் ஃபோனிலேயே குடியிருக்கின்றனர்.

ஆதலால் பெரும்பாலான நேரங்களில் கழுத்தை மட்டுமல்லாமல் உடம்பையும் குனிந்து கொண்டே மொபைல் ஃபோனை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு  மொபைல் ஃபோனை அதிகமாக குனிந்தபடியே பயன்படுத்தும்போது தலையின் மொத்த எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் தசை நார்கள் வளர்ந்து, தலையின் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்கிறது என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆதலால் சிறிது நேரம் மட்டுமே மொபைல் ஃபோனை பயன்படுத்துமாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த செய்தி மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments