அர்ச்சனா அணியின் அடுத்த டார்கெட் இந்த இருவர்தான்!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (10:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா தனக்கென ஒரு அணியை வைத்துக்கொண்டு தனது அணியில் இல்லாதவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றி வருவதாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது 
 
அர்ச்சனாவின் அணியில் நிஷா, ரியோ, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம்சேகர் ஆகியோர் இருந்த நிலையில் தற்போது புதிய வரவாக ஆஜித்தும் அந்த அணியில் இணைந்துள்ளார். மேலும் ஷிவானியையும் இணைக்க முயற்சி நடக்கின்றன
 
இந்த நிலையில் இன்று இந்த வாரம் மோசமாக செயல்பட்டவர்கள் என்று கணக்கெடுப்பு வரும் நிலையில் அர்ச்சனா அணியில் உள்ள அனைவரும் ஆரி மற்றும் அனிதாவை நாமினேட் செய்துள்ளனர் இதனால் இன்று இருவரும் சிறைக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
அதே போல் சிறப்பாக விளையாடியவர்கள் குறித்த இடத்திலும் கண்டிப்பாக அந்த அணியில் உள்ளவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஒருவரை தான் நாமினேட் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் கேப்டன்ஷிப்பை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தனித்தன்மையுடன் விளையாடி வருபவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது தான் தற்போது அர்ச்சனா அணியின் எண்ணமாக உள்ளது
 
இந்த சதியை பாலாஜி மற்றும் ஆரி இணைந்து எப்படி முறியடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments