Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் ராஜபக்சே குடும்பத்தினர் பல்லாயிரம் கோடி ரூபாய் பதுக்கல்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2016 (07:33 IST)
துபாய் நாட்டு வங்கியில், ராஜபக்சே குடும்பத்தினர் 25,000 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றவும் திட்டமிட்டுள்ளார்.


 
 
துபாய் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்து எதிர்க்கட்சியின் முதன்மை அமைப்பாளரான அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாகன சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியெல்ல, இந்த விவகாரம் குறித்து பிரதமர் ரணில் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக சிறப்புரை ஆற்றவுள்ளதாக கூறினார். மேலும், துபாய் நாட்டு வங்கியில், ராஜபக்சே குடும்பத்தினர் 25,000 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்
 
மேலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச துபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments