Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: விக்னேஸ்வரன் தகவல்

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: விக்னேஸ்வரன் தகவல்

Webdunia
புதன், 1 ஜூன் 2016 (14:10 IST)
புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் புதிய கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல் வெளியானது.
 
இது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் என்னுடன் மிகவும் நட்பாகவே உள்ளார். அவருடன் நானும் நட்பில் உள்ளேன்.
 
மேலும், வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு சம்பந்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே,  தமிழர்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்க வழிவகை செய்வதில் இருவரும் உறுதியாக உள்ளோம். இதனால், தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்சி தேவையில்லை என்றார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments