மாநிலங்களவையில் மேஜையைத் தட்டி சச்சின் ஆரவாரம்!
, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2013 (13:10 IST)
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு வருகை தந்த சச்சின் தனது உற்சாகத்தினால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றதற்கு பாராட்டுத் தெரிவிக்கையில் சச்சின் டெண்டுல்கர் உற்சாகமாக மேஜையைத் தட்டி ஆரவாரத்துடன் தன் மகிழ்ச்சியை தெரிவித்தார்.(ஆஹா மேஜைத் தட்டும் பழக்கம் நம்மவரையும் தொற்றிக் கொண்டு விட்டதே! அடுத்து என்ன அரசியல்தான்!)பிரதமர் மன்மோகனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். சச்சின் மனைவி அஞ்சலி பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.முன்னதாக இருக்கையில் அமரும் முன்னர் பல உறுப்பினர்களும் சச்சினுக்கு கை கொடுத்தனர். பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தருடன் சச்சின் கலந்துரையாடினார்.