Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூபதி-போபண்ணா பாரீஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2012 (12:46 IST)
FILE
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, 7-ம் நிலை ஜோடியான பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வென்று பட்டம் வென்றது.

1 மணிநேரம் 24 நிமிடங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த போட்டியில் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி 7- 6 (6), 6- 3 என்ற நேர் செட்டுகளில் பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வெற்றிக்கொண்டது.

இந்த சீசனில் நான்கு இறுதிப்போட்டிகளுக்கு இந்த ஜோடி தேர்வானது குறிப்பிடத்தக்கது. முன்னதாக துபாய் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற பூபதி-போபண்ணா ஜோடி, தற்போது இரண்டாவதாக பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளது.

ஏற்கனவே, இந்த வருடம் நடைபெற்ற ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் மற்றும் ஷாங்காய் ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் தொடர்களில் பூபதி-போபண்ணா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

Show comments