Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 ஏஸ்கள் அடித்து இறுதிக்குள் நுழைந்தார் செரீனா

24 ஏஸ்கள் அடித்து இறுதிக்குள் நுழைந்தார் செரீனா
, வியாழன், 5 ஜூலை 2012 (21:06 IST)
FILE
விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள அசரென்காவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.

முதல் செட்டில் அசரென்காவின் சர்வை உடைத்து 6-3 என்று கைப்பற்றி செரீனாவிற்கு 2வது செட்டில் கடும் போட்டி கொடுத்தார் அசரென்கா.

ஆட்டம் டை-பிரேக்கருக்கு வந்தது. இதில் 8-6 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று 6-3, 7-6 என்ற நேர் செட்களில் வென்று இறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.

இந்தப் போட்டியில் இரண்டே செட்களில் 24 ஏஸ்கள் அடித்து அசரென்காவை நிலை குலையச் செய்தார் செரீனா என்பது குறிப்பிடத்தக்கது. அசரெ‌ன்காவா‌ல் ஒரே ஒரு ஏ‌ஸ்தா‌ன் அடி‌க்க முடி‌ந்தது.

ஏற்கனவே நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் கெர்பரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ள ராட்வென்காவை (3) இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் செரீனா வில்லியம்ஸ்.

Share this Story:

Follow Webdunia tamil