Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஞ்சி இறுதிக்கு தமிழக அணி தகுதி பெறவில்லை

ரஞ்சி இறுதிக்கு தமிழக அணி தகுதி பெறவில்லை
ராஜஸ்தான், தமிழ் நாடு அணிகளுக்கு இடையே ஜெய்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ராஜஸ்தான் அணி இறுதிக்குத் தகுதி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 552 ரன்களுக்கு 7 விக்கெட் என்று டிக்ளேர் செய்த ராஜஸ்தான் பின்பு தமிழ்நாடு அணியை 385 ரன்களுக்குச் சுருட்டி, ஃபாலோ ஆன் அளித்தது.

தமிழ்நாடு அணியில் பத்ரிநாத் சிறப்பாக விளையாடி 175 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ராஜஸ்தான் அணியில் விவேக் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 2 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Share this Story:

Follow Webdunia tamil