Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவை வீழ்த்தி இறுதியில் பரோடா

Webdunia
புதன், 5 ஜனவரி 2011 (11:03 IST)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் கர்நாடகத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடா வென்றது.

திங்கள்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் வென்று முதலில் பேட் செய்த கர்நாடகம் 107 ரன்களில் முதல் இன்னிங ் ûஸ இழந்தது. அடுத்து முதல் இன்னிங ் ûஸ ஆடிய பரோடா 153 ரன்களை எடுத்தது.

முதல் பந்து முதல் ஆட முடியாத குண்டும் குழியுமான பிட்ச் போடப்பட்டதால் ஆட்டம் 3-வது நாளுக்குக் கூட நீடிக்கவில்லை.

தொடர்ந்து கர்நாடகம் இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடியது. இதனால் 88 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது.

3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களை எடுத்ததன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரோடா வென்றது. 4 நாள் நடைபெற வேண்டிய ஆட்டம், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் முடிவுக்கு வந்துவிட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

நானோ கிரிக்கெட் வாரியமோ எதாவது சொன்னோமா?... தன்னைப் பற்றிய வதந்திக்கு ஷமி வருத்தம்!

Show comments