ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் கர்நாடகத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடா வென்றது.
திங்கள்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் வென்று முதலில் பேட் செய்த கர்நாடகம் 107 ரன்களில் முதல் இன்னிங்ûஸ இழந்தது. அடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய பரோடா 153 ரன்களை எடுத்தது.
முதல் பந்து முதல் ஆட முடியாத குண்டும் குழியுமான பிட்ச் போடப்பட்டதால் ஆட்டம் 3-வது நாளுக்குக் கூட நீடிக்கவில்லை.
தொடர்ந்து கர்நாடகம் இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடியது. இதனால் 88 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது.
3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களை எடுத்ததன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரோடா வென்றது. 4 நாள் நடைபெற வேண்டிய ஆட்டம், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் முடிவுக்கு வந்துவிட்டது.