Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்டக்காரர்கள் அணுகியதாக இர்ஃபான் பத்தான் தகவல்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2010 (12:46 IST)
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் இர்பான் பத்தான் ஒரு போட்டியின் போது மர்ம சூதாட்டக்காரரிடமிருந்து தனக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வந்ததாகவும் அந்த விவரத்தை உடனடியாகத் தான் அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அது எந்த அணிக்கு எதிரான தொடர் என்பதையும், ஆண்டையும் குறிப்பிடாத இர்ஃபான் பத்தான் தனது விடுதி அறைக்கு அந்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வந்ததாக தெரிவித்துள்ளார்.

" முதலில் அவர் 3 விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்பினார். பிறகு 2 பரிசுப் பொருட்களை அனுப்பினார். அந்தப் பொருட்களை என்னால் விலை கொடுத்து வாங்கியிருக்க முடியாது.

" இது தவறு, எனக்கு முன்பின் தெரியாத ஒரு நபர் பரிசுப்பொருட்களை அனுப்பலாமா என்ற சந்தேகத்தில் அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன் உடனே விவகாரம் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு அதிகாரிகளிடத்தில் சென்றது.

என்று கூறியுள்ளார் பத்தான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

Show comments