சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி தோற்றிருந்தால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அது நடக்கவில்லை. ஒருவேளை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி தோல்வி அடைந்தால், இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் முதல் அரை இறுதி போட்டி செஞ்சூரியனில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஒரு நாள் போட்டி தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. அது சாம்பியன் கோப்பை போட்டியில் இலங்கை, இங்கிலாந்திடம் தோற்றதால் புள்ளிகள் 121 ஆனது. இதனால் அது 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் உள்ளன.
ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடனும் இந்தியா 124 புள்ளிகளுடனும் பட்டியலில் உள்ளன. இன்று ஆஸ்திரேலியா தோற்றால் 2 புள்ளிகள் குறைந்து 124 ஆகி விடும்.
இரு அணிகளும் சம புள்ளிகள் பெற்றிருக்கும். ஆனால் விகிதாச்சார கணக்கின்படி இந்தியா முதலிடத்துக்கு வந்து விடும். எனவே அரையிறுதிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியா தோற்றால் இந்தியாவுக்கு இப்படி ஒரு பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.