பெங்களூருவில் நடைபெற இருந்த ஐ.பி.எல். அரையிறுதிப் போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகள் மாற்றப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
அரையிறுதி 21, 22 தேதிகளில் மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பு எதிரொலியை அடுத்து மைதானம் அருகே இன்று மேலும் 3 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை பி.சி.சி.ஐ எடுத்துள்ளது.